ஒரு சிறு இசை – வண்ணதாசன்

மூக்கம்மா ஆச்சி சொல்வது போலத் தான் சொல்லத் தோன்றுகிறது: "எல்லாக் கதையும் ஒரே கதை தான். ஆதியிலே இருந்து ஒரு கதையைத் தான் ஓம்பது கதையா சொல்லிக்கிட்டு இருக்கோம் திலுப்பித் திலுப்பி"

அரசியல் சிந்தனையாளர் புத்தர்: ஒரு பார்வை

நூல் அறிமுகம்: "அரசியல் சிந்தனையாளர் புத்தர்" புத்தர் காலத்து இந்து சமுதாயத்துக்கும், ஆதிக்கம் செலுத்திய பிராமணியத்துக்கும் சவாலாகத் தோன்றிய சிந்தனையாக பௌத்தத்தை ஆய்வு செய்யும் நூல் காஞ்சா அய்லய்யா எழுதி இருக்கும் "அரசியல் சிந்தனையாளர் புத்தர்". நூல் நெடுக தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம், நிர்வாகம், நீதிமுறை ஆகியவற்றில் புத்தர் கொண்டிருந்த நிலைப்பாடுகளை அவர் வாழ்ந்த காலத்தில் ஊடாக சென்று விரித்துரைக்கிறார் ஆசிரியர்! 2500 ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிய தரவுகள் எவ்வாறு இப்போதும் …

Continue reading அரசியல் சிந்தனையாளர் புத்தர்: ஒரு பார்வை

Memoirs: ஓவியம்

Memoirs என்னும் இந்த சீரிஸ் அகால மரணத்துக்கு பின்னால், என்னைக் குறித்தான சில நினைவுகளை இன்னும் மேலும் சில நாட்களுக்கு கடத்த எழுதுவது. எனக்கு நினைவுதப்பிப் போனால், கொஞ்சம் என்னைப்பற்றி எனக்கே சொல்வதற்கும் கூடத்தான் இது. நேர்த்தியற்ற நினைவு அலைகளின் குறுக்கு வெட்டு தோற்றம்!

Introducing the vows of Navayana

Most of us know Dr.B.R.Ambedkar as architect of Indian Constitution, or saviour of Dalits; I'm sure some of the readers also knew of his conversion to Buddhism as the last resort to relieve oneself from the oppression of casteist Hinduism. The conversion to Navayana Buddhism by 800,000 people, on 14 October 1956 at Deeksha Bhoomi, …

Continue reading Introducing the vows of Navayana

Where Periyar meets Buddha

It is always the burning desire and unquestioning allegiance towards a particular notion that creates a form of oppression. Take an example of one who loves one's caste and castemen; then one oppresses the castes below and never questions the castes above and even goes to the extent to protect their interests. Take an example …

Continue reading Where Periyar meets Buddha

ஸ்டெர்லைட் தீர்ப்பு ஒரு பார்வை

(ஆகஸ்ட் 2020இல் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிற்று) ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், ஆலையை மூடியது சரியே என்று நேற்று அமைந்த தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் சில: Economic considerations can have no role to play while deciding the sustainability of a highly polluting industry. When it comes economy pitted against environment, environment will reign supreme. …

Continue reading ஸ்டெர்லைட் தீர்ப்பு ஒரு பார்வை

கற்பிதம்

கடவுளுக்குக் காதுகள் இல்லையாம்...வேண்டுதல்கள் கேட்கஇசைக்கு செவிசாய்க்கஇறைஞ்சலுக்கு இறங்கநீங்கள் திட்டுவதைக் கேட்ககடவுள் பெயரால் அடிவாங்கியமனிதனின் கதறல் கேட்ககடவுளுக்கு காதுகளே இல்லையாம்! கடவுளுக்கு கண்கள் இல்லையாம்...தன் பக்தனைப் பார்க்கஅவன் படும் பாடுகளைக் காணகடவுள் பெயரால் அரங்கேறும்வன்முறைகள் சகிக்க, எனகடவுளுக்கு கண்களும் இல்லையாம்! கடவுளுக்கு கைகள் இல்லையாம்-அபயம்,வேல் சூலம் வாள் வீச்சரிவாள்,ஜபமாலை,கமண்டலம்,வேதம் வீணைஎன இவையும் பிறவும் தாங்ககடவுளுக்குக் கைகளும் இல்லையாம்! காதும் கண்களும் கைகளும் இல்லாதகடவுளை கண்டதுண்டா நீங்கள்?அடக் கடவுளே இல்லையாம்சென்று வேலையைப் பாருங்கள்...~அமரன் 08-03-2020

அறியா மொழியில் ஓர் பயணம்!

தூக்கக் கலக்கமும், பசியும், அறியாத மொழி தரும் அயர்ச்சியும், இடுக்கிக் கொண்டு தடதடக்கும் மலைப் பாதைகள் ஊடே பயணித்து வந்த உடல் வலியும் சேர்ந்த ஒரு கலவையான மனநிலையில், சரியாக ஒரு வருடத்துக்கு முன்னால், கட்கோராவில் நடந்த வாக்குவாதம் ஒன்று நேற்று நடந்தது போல் ஞாபகம் இருக்கிறது. ஹரியின் தம்பி கோகுல் அடுத்த நாள் காலை உதாய்ப்பூர் செல்ல வேண்டும். பிலாஸ்புரில் 4 மணிக்கு ரயில் இறங்கி, அங்கிருந்து 80கிமீ உள்ள கட்கோராவுக்கு வருவதற்கே எங்களுக்கு கிட்டத்தட்ட …

Continue reading அறியா மொழியில் ஓர் பயணம்!

வெக்கை – அசுரன்

15OCT2019 15 வயது சிதம்பரம் செய்யும் கொலை ஒன்று அவனையும், அவன் குடும்பத்தையும் அலைச்சலுக்கு உட்படுத்துகிறது. சாதாரண கொலை - பழிவாங்கல் கதை, சாதி கட்டமைப்பின் கண் கொண்டு பார்க்கும்போது சமூக அநீதியின் வெளிப்பாடாகப்படுகிறது.சிதம்பரம் "வடக்கூரானுக்கும், ஜின்னிங்பேக்டரிக்காரனுக்கும் ஏன் கோர்டும், போலீசும் தண்டனை குடுக்கல", என்று எழுப்பும் கேள்வி நம் மொத்த சமூகத்துக்குமானது. போலீசும், கோர்டும் சாதிக்கு உட்பட்டவையே என்று தெரியும்போது உண்டாகும் அருவருப்பும் வெக்கையுமே இந்தக் கதைக்கு மூலம். எளியதொரு கதையின் பின்னணியில், சிதம்பரம் - …

Continue reading வெக்கை – அசுரன்