ஒரு சிறு இசை – வண்ணதாசன்

மூக்கம்மா ஆச்சி சொல்வது போலத் தான் சொல்லத் தோன்றுகிறது: "எல்லாக் கதையும் ஒரே கதை தான். ஆதியிலே இருந்து ஒரு கதையைத் தான் ஓம்பது கதையா சொல்லிக்கிட்டு இருக்கோம் திலுப்பித் திலுப்பி"

அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்|ஸ்டாலின் ராஜாங்கம்

அயோத்திதாசர் என்பவரை அவரது பிறந்தநாள் சமீபமாக பத்திரிகை கட்டுரைகளில் படித்தது தான் முதலில் அவர் குறித்து அறிந்தது. பின்னர் அம்பேத்கருக்கு முன்னமே பௌத்தம் தழுவிய தலித் செயல்பாட்டாளர் என்று அறிந்ததும் இவரைக் குறித்து மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்/சித்த மருத்துவர்/சாதி எதிர்ப்புப் போராளி அயோத்திதாசப் பண்டிதர். ஆங்கிலேயர் முதன்முதலில் மக்கள் கணக்கெடுப்பு தொடங்கிய 1881 ஆண்டிலேயே, தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட சாதியினரை இந்துக்களாக கருதாது, பூர்வத்தமிழர்/ஆதித்தமிழர் என்றே கருத …

Continue reading அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்|ஸ்டாலின் ராஜாங்கம்

அரசியல் சிந்தனையாளர் புத்தர்: ஒரு பார்வை

நூல் அறிமுகம்: "அரசியல் சிந்தனையாளர் புத்தர்" புத்தர் காலத்து இந்து சமுதாயத்துக்கும், ஆதிக்கம் செலுத்திய பிராமணியத்துக்கும் சவாலாகத் தோன்றிய சிந்தனையாக பௌத்தத்தை ஆய்வு செய்யும் நூல் காஞ்சா அய்லய்யா எழுதி இருக்கும் "அரசியல் சிந்தனையாளர் புத்தர்". நூல் நெடுக தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம், நிர்வாகம், நீதிமுறை ஆகியவற்றில் புத்தர் கொண்டிருந்த நிலைப்பாடுகளை அவர் வாழ்ந்த காலத்தில் ஊடாக சென்று விரித்துரைக்கிறார் ஆசிரியர்! 2500 ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிய தரவுகள் எவ்வாறு இப்போதும் …

Continue reading அரசியல் சிந்தனையாளர் புத்தர்: ஒரு பார்வை

வாசிப்பு 1: எண்பதுகளின் தமிழ் சினிமா

'திரைப்படங்களின் ஊடாகத் தமிழ்ச் சமூக வரலாறு' என்ற துணை தலைப்போடு வருகிறது ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் 'எண்பதுகளின் தமிழ் சினிமா'. வெறும் வரலாறாக இல்லாமல், அக்காலகட்டத்தின் தமிழ் சமூகமும், சினிமாவும் ஊடாடுகிற இடங்களை கோடிட்டுக் காட்டும் கட்டுரைகளைத் தாங்கியிருக்கிறது. சரியாக 1980இல் இருந்து 1989 வரையிலான படங்களாக இல்லாது, 80களின் குறிப்பிட்ட ஒரு போக்கை தாங்கி வந்திருக்கிற, 80களுக்கு முன்னும் பின்னும் வந்திருக்கும் படங்களையும் இவரது கட்டுரைகள் பேசுகின்றன. வழக்காறுகள், தெய்வ நம்பிக்கை, சாதியக் கட்டுமானம் என்று …

Continue reading வாசிப்பு 1: எண்பதுகளின் தமிழ் சினிமா

வெக்கை – அசுரன்

15OCT2019 15 வயது சிதம்பரம் செய்யும் கொலை ஒன்று அவனையும், அவன் குடும்பத்தையும் அலைச்சலுக்கு உட்படுத்துகிறது. சாதாரண கொலை - பழிவாங்கல் கதை, சாதி கட்டமைப்பின் கண் கொண்டு பார்க்கும்போது சமூக அநீதியின் வெளிப்பாடாகப்படுகிறது.சிதம்பரம் "வடக்கூரானுக்கும், ஜின்னிங்பேக்டரிக்காரனுக்கும் ஏன் கோர்டும், போலீசும் தண்டனை குடுக்கல", என்று எழுப்பும் கேள்வி நம் மொத்த சமூகத்துக்குமானது. போலீசும், கோர்டும் சாதிக்கு உட்பட்டவையே என்று தெரியும்போது உண்டாகும் அருவருப்பும் வெக்கையுமே இந்தக் கதைக்கு மூலம். எளியதொரு கதையின் பின்னணியில், சிதம்பரம் - …

Continue reading வெக்கை – அசுரன்

Astrophysics for people in a hurry

Prelude Imagine yourselves climbing steep steps, treaded long and standing facing an endless valley; a beautiful scenery. Wouldn't you feel suddenly insignificant before it's massiveness? Forget the cliff, look at the sky with all those billion stars and planets and darkness between them! Does our presence even matter? The Beginning "Astrophysics for people in a …

Continue reading Astrophysics for people in a hurry

புத்தம் சரணம்

பவுத்தக் கருத்தானது, எப்படி சமயம் என்னும் தளத்தில் நில்லாது வாழும்முறை ஒன்றாகப் பரிமாணம் கொள்கிறது என்பதையும் அறிகிறோம். குருகுலத்துக்கு மாற்றாக யாருமே கேள்வி கேட்கலாம் என்கிற சங்கம் முறை, பிறப்பின் அடிப்படையில் தீண்டாமை பாராட்டாத சமத்துவம் வாய்ந்த மாற்றாகவும் அமைகிறது.

இளைஞர்களுக்கான புத்தர்!

அண்மையில் குலுக்கை youtube சேனலில் பேராசிரியர் கருணானந்தன் அவர்களது, பௌத்தம் மற்றும் சமணம் குறித்த உரையைக் காண நேர்ந்தது.  அவர் அதில் பௌத்தத்தின் முக்கியக் கூறுகளாக குறிப்பிட்டுக் கூறிய அனாத்ம வாதமும், அநித்ய வாதமும் என் கவனத்தைத் தூண்டின. அனாத்ம வாதம் என்பது ஆத்மா என்னும் ஒன்றே இல்லை என்ற புத்தரின் வாதம். அநித்ய வாதம் என்பது மாறிக்கொண்டே இருக்கும் உலகின் நிலை இல்லாத தன்மையை குறிக்கும். ஆத்மா என்பது மனிதரின் கற்பனை; ஆத்மா இருப்பது கொண்டு …

Continue reading இளைஞர்களுக்கான புத்தர்!