கரோனா தந்த முடக்கம் பலருக்கு பலதையும் கற்றுத் தந்திருக்கும். எனக்கு கற்றுத் தந்தது முக்கியமாய் மூன்று விஷயங்கள்: 1. குறள் என்னும் பொதுமறையின் நேர்த்தியும் அழகும் 2. அசாத்தியப் பொறுமை 3. கத்திரிக்காயை ரசித்தல். முதலிரண்டையும் பற்றி நிறைய பேச விரும்புகிறேன்; இந்தக் கட்டுரை கொஞ்சம் பொறுமை பற்றியது; மூன்றாவதைப் பற்றி மட்டும் ஒன்றும் சொல்வதற்கில்லை... முதலில் போன்றல்லாமல், இப்போதெல்லாம் பறவைகள் காணல் செல்லும்போது முன்னம்விட பொறுமையாகப் பார்ப்பதாக உணர்கிறேன். சீக்கிரம் வீட்டுக்குப் போய் என்ன செய்யப் …
Month: May 2020
வெக்கை – அசுரன்
15OCT2019 15 வயது சிதம்பரம் செய்யும் கொலை ஒன்று அவனையும், அவன் குடும்பத்தையும் அலைச்சலுக்கு உட்படுத்துகிறது. சாதாரண கொலை - பழிவாங்கல் கதை, சாதி கட்டமைப்பின் கண் கொண்டு பார்க்கும்போது சமூக அநீதியின் வெளிப்பாடாகப்படுகிறது.சிதம்பரம் "வடக்கூரானுக்கும், ஜின்னிங்பேக்டரிக்காரனுக்கும் ஏன் கோர்டும், போலீசும் தண்டனை குடுக்கல", என்று எழுப்பும் கேள்வி நம் மொத்த சமூகத்துக்குமானது. போலீசும், கோர்டும் சாதிக்கு உட்பட்டவையே என்று தெரியும்போது உண்டாகும் அருவருப்பும் வெக்கையுமே இந்தக் கதைக்கு மூலம். எளியதொரு கதையின் பின்னணியில், சிதம்பரம் - …
Astrophysics for people in a hurry
Prelude Imagine yourselves climbing steep steps, treaded long and standing facing an endless valley; a beautiful scenery. Wouldn't you feel suddenly insignificant before it's massiveness? Forget the cliff, look at the sky with all those billion stars and planets and darkness between them! Does our presence even matter? The Beginning "Astrophysics for people in a …
ஒரு எளிய பாதையின் பாடல்…
படம்: பதேர் பாஞ்சாலி (1955)இயக்கம்: சத்யஜித் ரே மீளாத துயரமே ஆட்டிப்படைக்கும் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தின் சின்னஞ்சிறு மகிழ்ச்சி, அதன் குழந்தைகள். விளையாட்டுப் பிள்ளையான பெரியவள் துர்கா நமக்கு முதல் காட்சியிலேயே அறிமுகம் ஆகிறாள். தோட்டத்தில் பழங்கள் திருடி பாட்டிக்குத் தருவதும், பின்னர் அம்மாவிடம் திட்டு வாங்குவதுமாக வரும் துர்கா பாத்திரம் ஏற்ற பெண்ணை எப்படித்தான் அம்மாவின் ஜாடையிலேயே தேடிப்பிடித்தார்களோ! அப்பாவும் சின்னவன் அப்புவும் கூட ஒரே ஜாடை! அப்பு பிறந்தவுடன் நல்லதே நடக்கும் என்று …