சிவில் வாருக்கு முந்தைய அமெரிக்காவின் மிக முக்கிய வழக்கு amistad கப்பலில் வந்த ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களின் உடமை குறித்தது. தெற்கு அமெரிக்கா கறுப்பின மக்களை அடிமைகளாகவே தொடரவும், வடக்கு அமெரிக்க மாகாணங்கள் அவற்றை படிப்படியாக தளர்த்தவும் முயன்று கொண்டிருந்த தருணத்தில் தான் ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட மக்களோடு, amistad கப்பல் வந்து சேர்கிறது. அது அமெரிக்க தேர்தல் நேரம் வேறு; வான் பூரன் தன் சீட்டை தக்கவைத்துக்கொள்ள தெற்கு மாகாண அடிமை வியாபார பிரபுக்களோடு …
ஸ்டெர்லைட் தீர்ப்பு ஒரு பார்வை
(ஆகஸ்ட் 2020இல் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிற்று) ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், ஆலையை மூடியது சரியே என்று நேற்று அமைந்த தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் சில: Economic considerations can have no role to play while deciding the sustainability of a highly polluting industry. When it comes economy pitted against environment, environment will reign supreme. …
கற்பிதம்
கடவுளுக்குக் காதுகள் இல்லையாம்...வேண்டுதல்கள் கேட்கஇசைக்கு செவிசாய்க்கஇறைஞ்சலுக்கு இறங்கநீங்கள் திட்டுவதைக் கேட்ககடவுள் பெயரால் அடிவாங்கியமனிதனின் கதறல் கேட்ககடவுளுக்கு காதுகளே இல்லையாம்! கடவுளுக்கு கண்கள் இல்லையாம்...தன் பக்தனைப் பார்க்கஅவன் படும் பாடுகளைக் காணகடவுள் பெயரால் அரங்கேறும்வன்முறைகள் சகிக்க, எனகடவுளுக்கு கண்களும் இல்லையாம்! கடவுளுக்கு கைகள் இல்லையாம்-அபயம்,வேல் சூலம் வாள் வீச்சரிவாள்,ஜபமாலை,கமண்டலம்,வேதம் வீணைஎன இவையும் பிறவும் தாங்ககடவுளுக்குக் கைகளும் இல்லையாம்! காதும் கண்களும் கைகளும் இல்லாதகடவுளை கண்டதுண்டா நீங்கள்?அடக் கடவுளே இல்லையாம்சென்று வேலையைப் பாருங்கள்...~அமரன் 08-03-2020
அறியா மொழியில் ஓர் பயணம்!
தூக்கக் கலக்கமும், பசியும், அறியாத மொழி தரும் அயர்ச்சியும், இடுக்கிக் கொண்டு தடதடக்கும் மலைப் பாதைகள் ஊடே பயணித்து வந்த உடல் வலியும் சேர்ந்த ஒரு கலவையான மனநிலையில், சரியாக ஒரு வருடத்துக்கு முன்னால், கட்கோராவில் நடந்த வாக்குவாதம் ஒன்று நேற்று நடந்தது போல் ஞாபகம் இருக்கிறது. ஹரியின் தம்பி கோகுல் அடுத்த நாள் காலை உதாய்ப்பூர் செல்ல வேண்டும். பிலாஸ்புரில் 4 மணிக்கு ரயில் இறங்கி, அங்கிருந்து 80கிமீ உள்ள கட்கோராவுக்கு வருவதற்கே எங்களுக்கு கிட்டத்தட்ட …
குழப்பத்தின் வண்ணங்கள்
நிறையக் குழப்பங்களையும் கொஞ்சமே கொஞ்சம் வண்ணங்களையும் கொண்டவன் நான். அதனாலேயே வண்ணங்கள் என் தேடலாயிற்று…
ஒரு வானம்பாடியின் பாடல்
கரோனா தந்த முடக்கம் பலருக்கு பலதையும் கற்றுத் தந்திருக்கும். எனக்கு கற்றுத் தந்தது முக்கியமாய் மூன்று விஷயங்கள்: 1. குறள் என்னும் பொதுமறையின் நேர்த்தியும் அழகும் 2. அசாத்தியப் பொறுமை 3. கத்திரிக்காயை ரசித்தல். முதலிரண்டையும் பற்றி நிறைய பேச விரும்புகிறேன்; இந்தக் கட்டுரை கொஞ்சம் பொறுமை பற்றியது; மூன்றாவதைப் பற்றி மட்டும் ஒன்றும் சொல்வதற்கில்லை... முதலில் போன்றல்லாமல், இப்போதெல்லாம் பறவைகள் காணல் செல்லும்போது முன்னம்விட பொறுமையாகப் பார்ப்பதாக உணர்கிறேன். சீக்கிரம் வீட்டுக்குப் போய் என்ன செய்யப் …
வெக்கை – அசுரன்
15OCT2019 15 வயது சிதம்பரம் செய்யும் கொலை ஒன்று அவனையும், அவன் குடும்பத்தையும் அலைச்சலுக்கு உட்படுத்துகிறது. சாதாரண கொலை - பழிவாங்கல் கதை, சாதி கட்டமைப்பின் கண் கொண்டு பார்க்கும்போது சமூக அநீதியின் வெளிப்பாடாகப்படுகிறது.சிதம்பரம் "வடக்கூரானுக்கும், ஜின்னிங்பேக்டரிக்காரனுக்கும் ஏன் கோர்டும், போலீசும் தண்டனை குடுக்கல", என்று எழுப்பும் கேள்வி நம் மொத்த சமூகத்துக்குமானது. போலீசும், கோர்டும் சாதிக்கு உட்பட்டவையே என்று தெரியும்போது உண்டாகும் அருவருப்பும் வெக்கையுமே இந்தக் கதைக்கு மூலம். எளியதொரு கதையின் பின்னணியில், சிதம்பரம் - …
Astrophysics for people in a hurry
Prelude Imagine yourselves climbing steep steps, treaded long and standing facing an endless valley; a beautiful scenery. Wouldn't you feel suddenly insignificant before it's massiveness? Forget the cliff, look at the sky with all those billion stars and planets and darkness between them! Does our presence even matter? The Beginning "Astrophysics for people in a …
ஒரு எளிய பாதையின் பாடல்…
படம்: பதேர் பாஞ்சாலி (1955)இயக்கம்: சத்யஜித் ரே மீளாத துயரமே ஆட்டிப்படைக்கும் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தின் சின்னஞ்சிறு மகிழ்ச்சி, அதன் குழந்தைகள். விளையாட்டுப் பிள்ளையான பெரியவள் துர்கா நமக்கு முதல் காட்சியிலேயே அறிமுகம் ஆகிறாள். தோட்டத்தில் பழங்கள் திருடி பாட்டிக்குத் தருவதும், பின்னர் அம்மாவிடம் திட்டு வாங்குவதுமாக வரும் துர்கா பாத்திரம் ஏற்ற பெண்ணை எப்படித்தான் அம்மாவின் ஜாடையிலேயே தேடிப்பிடித்தார்களோ! அப்பாவும் சின்னவன் அப்புவும் கூட ஒரே ஜாடை! அப்பு பிறந்தவுடன் நல்லதே நடக்கும் என்று …
புத்தம் சரணம்
பவுத்தக் கருத்தானது, எப்படி சமயம் என்னும் தளத்தில் நில்லாது வாழும்முறை ஒன்றாகப் பரிமாணம் கொள்கிறது என்பதையும் அறிகிறோம். குருகுலத்துக்கு மாற்றாக யாருமே கேள்வி கேட்கலாம் என்கிற சங்கம் முறை, பிறப்பின் அடிப்படையில் தீண்டாமை பாராட்டாத சமத்துவம் வாய்ந்த மாற்றாகவும் அமைகிறது.